சென்னை மாவட்ட செய்திகள்

 
சென்னை  மாவட்டப்  பணிநிறைவு  வருவாய்த்துறை  அலுவலர்கள் கூட்டமைப்பு

சென்னை  

அன்புடையீர் !

வணக்கம்.

சென்னை மாவட்ட வருவாய்  அலகில் பணியாற்றி  பணி நிறைவு  பெற்ற பணியாளர்களின் கூட்டம்  வரும் சனிக்கிழமை  11 .02 . 2012  அன்று பிற்பகல் 3.00  மணிக்கு மாவட்டாட்சியர்  அலுவலகக்  கூட்ட அரங்கில் (8 வது தளத்தில் )
நடைபெறவுள்ளது.

தாங்கள் அன்புடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களின் நண்பர்களுக்கும் இத்தகவலைத்  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள ,

ஒருங்கிணைப்பாளர்கள்.

தொடர்புகொள்ள

திரு . ராஜு 9380006487
திரு  தா. ஸ்ரீதரன் 9941181056
திரு  எஸ். தர்மராஜன் 9444281612
திரு  எஸ். எம். காந்தி 9840569167
திரு  எஸ். கண்ணன் 9444058891
திரு  எம்.டி. இளங்கோவன் 9381090082
திரு  கே.எஸ்.சுப்பிரமணியன்  9841289109
திரு  ஜி. கிருஷ்ணமூர்த்தி 9840539453
திரு. எஸ். நடராஜன் 9444446049


---------------------------------------------------------------------------------------------------------------


விழுப்புரம் மாவட்ட செய்திகள்

01 .10 .2010 அன்று காலை 10  மணியளவில் விழுப்புரம்  வட்டாச்சியர் அலுவலக
வளாகத்தில் தமிழ் நாடு பணிநிறைவு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட கூட்டம்  அமைப்பாளர் தோழர் சி .பீட்டர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


கூட்டம் மாநில நிர்வாகிகள்  தலைவர்  தோழர் A .ராஜு D R O (Retd ) , துணைத்தலைவர்கள்   தோழர் G .கிருஷ்ணமூர்த்தி D  R O (Retd ),  தோழர் J.துரைசிங்கம் Dy .collr .(Retd ),மாநிலப்பொருளாளர் தோழர் S .நடராஜன் D .R O  (Retd ), மாநிலப் பிரச்சா செயலாளர்  தோழர் P .சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது .


கூட்டத்தில் மாவட்டநிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் துனைஆட்சியர்(ஓய்வு) திருசி.பீட்டர் மற்றும் வட்டாட்சியர்கள்
( ஓய்வு  )வீ.லெனின், ஆர்.ஜெயக்குமார், எம்.ஆர்.டிமுருகன், எஸ்.ராஜேந்திரன்,எஸ்.பி.பாலகிருஷ்ணன்,ஜீ.குமரேசன்,டி.ஸ்ரீனிவாசன்,எம்.மணி,
டி.பொன்னுசாமி,கே.கண்ணன்,.மனோகரன்,எம்.இளங்கோவன்,இரா.சங்கரராமன் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு  சிறப்பித்தார்கள்.


கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 


.தீர்மானம் 1 :  அரசு வெளியிட்ட ஆணை எண் 71 நீதித்துறை  நாள் 26 .02 .2011 ன்படி வட்டாட்சியர்களுடைய  அடிப்படை வூதியத்தை ரூ .15600  என நிர்ணயம் செய்தமைக்கு மாவட்ட சங்கம் மனமார்ந்த நன்றியை அரசுக்கு தெரிவித்துகொள்கின்றது.


தீர்மானம் 2 : மேற்படி ஆணைக்கு  உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளதால் மாநிலமையம் அரசு ஆணையினை  அமுல்படுத்திட உரிய நடவடிக்கை தமிழக அரசு மூலம் எடுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது .


தீர்மானம் 3 : துணை ஆட்சியர்  மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்கள் ஊதியத்தில் உள்ள குறைப்பாடுகளை நீக்கிட தமிழக அரசை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .


சி .பீட்டர் ,
மாவட்டத்தலைவர் .