செயற்குழுக்கூட்டம் கோயம்புத்தூர் - 28.4.2018

28.4.2018ல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில்  துணைத்தாசில்தார் தாசில்தார் துணைக் கலெக்டர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியவர்களின் சம்பள முரண்பாடுகளைப்பற்றியும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக 13.4.1998 அரசாணை எண்162 /நிதி/யின்படி செயலகத்தில் உள்ள பகுதி தலைவரும்  (section officer) தாசில்தாரும் ஒரே சம்பள விகிதம் பெற்றுவந்தனர். Rs.6500-200-10500.அதற்குப்பின் இந்த சம்பள விகிதம் திருத்தி அமைக்கும் போது பகுதி தலைவரைவிட தாசில்தார்  குறைவாகவே பெற்று வந்துள்ளனர். 12.12.2007 தேதிய தேதிய  அரசாணை எண் 234 நிதி யின்படி தாசில்தார் 9300-34800+grade pay 4900 pay bond 2 என்ற விகிதத்தில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பகுதி பிரிவுத் தலைவருக்கு அதே ஆணையில் 15600-39100 + grade pay 5400 in pay band 3 என்ன நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குப்பின்  26.2.2011 14.2013ல் வட்டாட்சியர் சம்பளம் திருத்தி அமைக்கப்பட்ட போதிலும் 11.10.2017 அரசாணை எண்  303 நிதி யின்படி குறைந்த பட்ச சம்பளம் 37700 என நிர்ணயிக்கப்படுகிறது.  

அதே நேரத்தில் அதே அரசாணையில் பிரிவுத் தலைவருக்கு குறைந்த பட்ச சம்பளமாக 56100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் Rs.18400. சில உதவியாளர்களை மட்டும் கண்காணித்து வந்த பகுதித்தலைவருக்கும் ஒரு தாலுகாவை நிர்வாகம்செய்துவரும் வட்டாட்சிருக்கும் 1998ல் ஒரே சம்பள விகிதம் இருந்தது. 2017 ல் குறைந்த பட்சம் சம்பளத்தில் வட்டாட்சியர் அவரைவிட  18400 குறைவாகப் பெறுகிறார்.என்பதை பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.அதேபோல் தட்டச்சராக பதவி ஏற்று ஓய்வு பெற்றவர் தற்போது  ஓய்வூதியமாக ரூ.26080  பெறுகிறார் தட்டச்சராக வருவாய்த்துறையில் சேர்ந்து பின் அனைத்து தேர்விலும் தேர்வு பெற்றும் அனைத்துப்பயிற்சியிலும் கலந்து கொண்டு படிப்படியாக பதவி உயர்வு பெற்று தாசில்தார் நிலையில் ஓய்வு பெறும் போது  ரூ.22630 பெறுகிறார். இந்த முரண்பாடுகள் பொதுச்செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டன.அதோடு 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு ஊதியக் குழு வின் பரிந்துரையை நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தியமைக்காததால் ஏற்பட்ட  இழப்புகளையும் சுட்டிக்காட்டப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெ.அவர்கள் அறிவித்த நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல்  இலவச பஸ் பாஸ் கொடுத்தல் இன்னும் முழுமையாக அமல்படுத்த படுத்தவில்லை. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முழுமையாக செயல்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டப்பட்டது. 

மத்திய அரசின்  ஊதியக்குழு ஆணைகள் அதே தேதியில் மாநில அரசு  அமுல் படுத்தாமல் பின் தேதியிட்டு அமுல்படுத்துவதால் நிலுவைத் தொகை இழப்பு   ஏற்படுகிறது. 01.04.2003க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.   இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தனிநபர் குழுவிற்கு அறிக்கை அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.துணைவட்டாட்சியர் வட்டாட்சியர் துணை கலெக்டர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியவர்களின்  சம்பளமுரண்பாடுகளைப்பற்றியும் தனி நபர்குழுவிற்கு தெரியப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.



As proposed, meeting with our members & the Tamil Nadu Civil Service Association was held on 28-04-2018 at Coimbatore.Members from many Dists after detailed discussion agreed to approach appropriate court for remedy since  the Govt did not consider our several representations.

Mr.Alagiriswamy, DRO Perambalur DT & President Civil service association assured support & also told that he would meet their members & get sufficient funds to meet court expenses.

Our association President Mr.J.Raghavan has agreed to accompany him. As already appealed by our President, consult other members in your dist & deposit the contribution in the Karur Vysya bank Chennai Nanganallur Br.SB A/C No. 1255155000124824,IFSC code Now KVBL 0001255.Pl contribute liberally & support.

Minutes for the meeting will  be sent by the President  & also necy memorandum will be presented before Mr.MA.Siddiq IAS, one member commission for pay anomaly during May.
Natarajan.S, Treasurer.TARROASSO.


Photos taken during E.C. Meeting held at Coimbatore on 28.04.2018



















No comments:

Post a Comment